பொது நலன் கருதி இயக்குனர் ஜியோன் இயக்கத்தில், கருணாகரன், யோக் ஜபீ, இம்மான் அண்ணாச்சி, சந்தோஷ் பிரதாப், ஆதித், அனு சித்தரா, சுபிக்ஷா மற்றும் பலர் நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹரிகணேஷ் இசையமைத்துவுள்ளார்.
கதை
டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றும் பூவரசன் (கருணாகரன்) இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தன் அண்ணனை தேடிக்கொண்டும், டாக்சி ஓட்டி வருகிறார். நெப்போலியன் (சந்தோஷ் பிரதாப்) கந்துவட்டி கொடுக்கும் யோக் ஜேபி கும்பலிடம் அடியாளாக வேலை பார்ப்பவர். கண்ணன் (அருண் ஆதித்) சென்னையில் மெக்கானிக்காக பணிபுரிபவர், இவர் தனது காதலி சுபிக்ஷாவுக்காக பைனான்ஸ் மூலம் வண்டி வாங்கி கொடுக்கிறார்.
இந்த 3 பேரின் வாழ்க்கையும் கந்துவட்டியால் இணைகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? அவர்களின் வாழ்க்கைப் பாதை எப்படி மாறுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.