தொடரி இயக்குனர் பிரபு சாலமனின் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படம் சென்னை முதல் மும்பை வரை செல்லும் ஒரு ரயிலில் நடக்கும் காதல் மற்றும் அதிரடியை மையமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.
கதை :
ரயிலில் கான்டீன் வேலை செய்பவராக வருகிறார் பூச்சியப்பன் (தனுஷ்). அதே ரயிலில் ஒரு நடிகைக்கு டச்சப் பெண்ணாக வருகிறார் சரோஜா (கீர்த்தி சுரேஷ்). சரோஜாவுக்கு தான் எப்படியாவது பாடகியாக ஆகவேண்டும் என்ற ஆசை. சரோஜாவை கடந்ததும் பூச்சியப்பனுக்கு காதல் மலர, தனக்கு வைரமுத்துவை தெரியும் என்று பொய் கூறி பழக ஆரம்பிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில், பூச்சியப்பன் கூறியது பொய் என தெரிந்ததும் சரோஜா பிரிந்து செல்கிறார். இந்நிலையில், ரயில் என்ஜின் மாஸ்டர் மாரடைப்பில் இறந்து போக, ரயில் 140 கிமீ வேகத்தில் செல்கிறது.
அந்த ரயிலை நிறுத்த பல போராட்டங்கள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இறுதியில் ரயிலை நிறுத்தினரா? பூச்சியப்பன் மற்றும் சரோஜாவின் காதல் என்ன ஆயிற்று என்பது மீதிக்கதை.