வேலையில்லா பட்டதாரி 2014-இன் தமிழ் அதிரடித் தமிழ் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி படப்பிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்தின் நாயகனான தனுஷ் இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக அமலா பால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில் துணைக்கதாப்பதிரத்தில் நடித்துள்ளனர். இது தனுஷின் 25ஆம் படமாகும். இதன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆவார்.
கதை
ரகுவரன் (தனுஷ்) ஒரு கட்டிட பொறியல் பட்டதாரி. பல வருடமாக வேலையில்லாமல் இருக்கிறார். தன் தம்பி வேலைக்கு செல்வதால், அவரின் அப்பா (சமுத்திரகனி) தம்பியுடன் ஒப்பிட்டு பேசுவது ரகுவரனுக்கு பிடிக்காமல் இருக்க ஒரு கட்டத்தில் ரகுவரனின் தாய் (சரண்யா பொன்வண்ணன்) காலமாகிறார். தன் தாயின் மறைவிற்கு தான்தான் கரணம் என்று எண்ணும் ரகுவரனுக்கு தன் தாயின் மூலமே வேலை கிடைக்கிறது.
அங்கு அரசாங்கத்தின் ஆணை கட்டிடம் கட்டுவதற்காக கிடைக்கிறது. ஆனால் அருண் என்ற எதிராளி அக்கட்டிடம் கட்டுவதை தடுக்கிறார். மேலும் பல தடங்களையும் ஏற்படுத்துகிறார்.அனைத்தையும் மீறி ரகுவரன் எவ்வாறு அக்கட்டிடத்தை கட்டி முடிக்கிறார். என்பதே உச்சகட்டமாக ஒன்றுதிரடியுள்ளார் இயக்குனர்.