வால்டர் இயக்குனர் யு. அன்பரசன் இயக்கத்தில் சிபி சத்யராஜ், சமுத்திரக்கனி, நடராஜன் (நட்டி) முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் தயாரிக்க, இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அதிரடி மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராசமாதி ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் எளையராஜா எடிட்டிங் செய்துள்ளார்.
வால்டர் படத்தின் பிரத்யேக தகவல்கள்இப்படத்தின் தலைப்பு 1993ம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான '
வால்டர் வெற்றிவேல்' படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான அப்படம் பெரிய அளவில் தமிழகத்தில் வெற்றிப்பெற்று பிரபலமானது.
2020ம் ஆண்டு உருவாக்கப்பட்டு வெளியான இப்படத்திலும் ஒரு காவல் துறை அதிகாரியின் திரில்லர் புலனாய்வு மற்றும் அதிரடி கதைக்களத்தை கொண்டுள்ளதால் இப்படத்திற்கு '
வால்டர்' தலைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
வால்டர் படத்தில் பணியாற்றியிருக்கும் படக்குழு பற்றிய முழுத்தகவல்கள்வால்டர் படத்தின் புகைப்படங்கள்2020ம் ஆண்டு வெளியான வால்டர் படத்தில் நாயகியாக ஷிரின் காஞ்சுவால நடித்துள்ளார். இவர் 2019ம் ஆண்டு '
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' படத்தில் நாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர். பின்னர் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மாடலிங் அழகி சனம் ஷெட்டி நடித்துள்ளார்.
இயக்குனர் அன்பரசன் இயக்கிய இப்படத்தில் முதலில் விக்ரம் பிரபு, அர்ஜுன் நடிக்கவிருந்த நிலையில் பின்னர் இப்படத்தின் படக்குழு சிபிராஜ் மற்றும் நடராஜனை நாயகன் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நியமித்துள்ளது. இப்படத்தின் விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகள் 2020ம் ஆண்டு முதல் தொடங்கி தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
வால்டர் படத்தின் ட்ரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் 2020 பிப் மாதல் இணையத்தில் வெளியாகி பிரபலமானது. இப்படம் 2020 மார்ச் 6ல் உலகம் முழுவதும் தமிழ் படமாக வெளியாகவுள்ளது.
வால்டர் படத்தின் கதைவால்டர் (சிபிராஜ்) ஒரு நேர்மையான காவல் துறை ஐ.பி.எஸ் அதிகாரி. இவர் சென்னையில் தனது பதிவி ஏற்கிறார். இவர் பதிவு ஏற்கும் அன்ற சென்னையில் இவர் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த குழந்தை காணலாம் போகிறது.
அது மட்டும் இன்றி பல இடங்களில் உள்ள 4 மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தைகளை திருடுகின்றனர் சில கும்பல்கள். அவர்களை தேடும் நாயகன் பின்னர் இதற்கு காரணம் நட்டி தான் என்பதனை கண்டறிந்து அவரை பிடிக்க போராடுவதே இப்படத்தின் திரில்லர் திரைக்கதை.