Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உடல்நலக்குறைவு.. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மரணம்.. தேசிய விருது படங்களை தயாரித்தவர்!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள தயாரிப்பாளர் குளத்தூர் பாஸ்கரன் நாயர் இன்று காலமானார்.
மலையாள சினிமாவில் இப்போது வரை பேசப்படும் படங்களைத் தயாரித்தவர், குளத்தூர் பாஸ்கரன் நாயர். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்குனராக அறிமுகமான படம் ஸ்வயவரம். மது, சாரதா நடித்திருந்த இந்தப் படம் 1972 ஆம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்துக்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்தன. இதை தயாரித்தவர் குளத்தூர் பாஸ்கரன் நாயர். புதிய அலை சினிமாவின் முன்னோடி படமாக இந்தப் படம் உள்ளது.
இதையடுத்து கொடியேட்டம் என்ற படத்தைத் தயாரித்தார். இதையும் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். 1978 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கும் தேசிய விருது கிடைத்தது.
முப்பதுக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கி தயாரித்துள்ள இவர், கேரளாவில் திரைப்பட சொசைட்டியை உருவாக்கியவர். இவரும் அடூர் கோபாலகிருஷ்ணனும் சேர்ந்துதான் சித்ரலேகா என்ற பிலிம் சோசைட்டியை உருவாக்கினார். கேரள சினிமா ரசிகர்களின் ரசனையை மாற்றியதற்கு இந்த சொசைட்டியின் பங்கு முக்கியமானது.
ரஜினி பட நடிகை கடற்கரையில் மேல் சாட்டை இல்லாமல் காத்து வாங்கும் போட்டோ வைரலாகி வருகிறது..
பின்னர் அடூரும் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். கடைசிவரை பிலிம் சொசைட்டியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த குளத்தூர் பாஸ்கரன் நாயர், திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார்.
இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. அவர் மறைவை அடுத்து கேரள திரையுலகினரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.