twitter
    Tamil»Movies»Gurkha»Story

    கூர்க்கா கதை

    கூர்க்கா இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த நகைச்சுவை மற்றும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் செந்தில் தயாரிக்க, ஒளிப்பதிவாளர் சதிஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபென் எடிட்டிங் பணியில், இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகள் முடிவடைய இருப்பதாக மே 9 2019 அன்று படக்குழுவினர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவித்துள்ளனர்.

    கதை
    கூர்கா வம்சாவளியை சேர்ந்த பகதூர் பாபு (யோகி பாபு) காவல் துறையில் சேர தீவிர முயற்சி செய்கிறார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. காவலர் தேர்வு நடக்கும் இடத்தில் யோகி பாபுவை போலவே சொதப்பும் அண்டர்டேக்கர் எனும் நாயும் யோகிபாபுவுடன் சேர்ந்துகொள்கிறது.

    காவல் துறையில் வேலை நிராகரிக்கப்படும் யோகி பாபுவுக்கு செக்யூரிட்டி வேலை தருகிறார். மனோபாலா. யோகி பாபு பணியமர்த்தப்படும் அப்பார்ட்மெண்டுக்கு அருகில் அமெரிக்க தூதரக அதிகாரி எலிசாவின் வீடு இருக்கிறது. எலிசா மீது காதலில் விழும் யோகி பாபு, அவரை கரெக்ட் செய்ய முயற்சிக்கிறார். ஆனால், எலிசாவை நெருங்குவது அவ்வளவு எளிதாக இல்லை. இந்த நிலையில், எலிசா அடிக்கடி செல்லும் வணிக வளாகத்திற்கு யோகி பாபு பணிமாற்றம் செய்யப்படுகிறார்.

    ஒருநாள் இரவில் எலிசாவை குறிவைத்து தீவிரவாதிகள் அந்த வணிகவளாகத்தை ஹை-ஜாக் செய்கிறார்கள். அப்பாவி மக்களும் யோகி பாபுவின் அமெரிக்க காதலியும் பிணைய கைதிகளாக சிக்கிக்கொள்கிறார்கள். தீவிரவாதிகள் எலிசாவை ஏன் குறிவைக்க வேண்டும்? அவர்கள் நோக்கம் என்ன? யோகி பாபு தன் காதலியையும் மக்களையும் மீட்டாரா? என்பதே மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie கூர்க்கா with us? Please send it to us ([email protected]).