நாய்கள் ஜாக்கிரதை 2014ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் சிபிராஜ், அருந்ததி நடித்திருக்கின்றார்கள். இந்த படத்தில் ஒரு நாய்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இப்படத்துக்கு நிசார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரன் குமார் இசை அமைத்திருக்கின்றார். 2014 நவம்பர் 21 அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
கதை
சிபிராஜ் ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஒரு கட்டத்தில் நாய் ஒன்று அவரிடம் வந்து சேருகிறது. அந்நாயை அவருக்கு பிடிக்காமல் இருக்கிறது. அனால் அது சிபியிடம் பழகப்பழக இருவரும் நெருக்கமாகின்றனர். முன்பு சிபியால் பாதிக்கப்பட்ட ஒரு குற்றவாளி கும்பல் சிபியின் சிபியின் கர்பிணி மனைவியை கடத்துகின்றனர். அவரின் மனைவியை எவ்வாறு காப்பாற்றுகிறார்? அதற்கு நாய் எவ்வாறு உதவியது? என்பதே உச்சக்கட்டம்.