சித்திரம் பேசுதடி 2 தமிழ் திரில்லர் திரைப்படம். இயக்குனர் ராஜன் மாதவ் இத்திரைப்படத்தை இயக்க, அஜ்மல் அமீர், அசோக், வித்தார்த், காயத்ரி, ராதிகா அப்டே மற்றும் நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சஜன் மாதவ் இசையமைக்க, தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் எல் வி இப்படத்தினை தயாரித்துள்ளார்.
கதை
படத்தின் தொடக்கத்தில் ஒருவரை கொலை செய்து தலைமறைவாகிறார் விதார்த். இன்னொரு பக்கம் பண நெருக்கடியில் சிக்கி, அதை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார் அஜ்மல். சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்யும் நிவாஸ் ஆதித்தனால், நந்தன் லோகநாதனுக்கும், காயத்திரிக்கும் இடையே ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. விதார்த்தையும், நந்தனையும் கொலைசெய்ய துடிக்கிறார் அசோக். இதற்கிடையே விதார்த்தால் வெட்டுப்பட்டு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வரும், தனது கணவரை போட்டுத்தள்ள காத்திருக்கிறார் ராதிகா ஆப்தே. சம்மந்தமே இல்லாத இந்த ஐந்து பேரும், ஒரு புள்ளியில் எப்படி இணைகிறார்கள் என்பதை இப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.