Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஜன 25-ம் தேதி முதல் நட்சத்திர கிரிக்கெட் சிசிஎல்.. மும்பை, சென்னை, துபாயில் நடக்கிறது
சென்னை: இந்தியாவின் பிரபல சினிமா நட்சத்திரங்கள் மோதும் சிசிஎல் எனும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.
இதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், நடிகர்கள் இதில் பங்கேற்று விளையாடுகிறார்கள்.
மும்பையில் முதல் போட்டி
மும்பையில் 25ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னை ரைனோஸ் எனும் தமிழ் நடிகர்கள் அணிக்கும் மும்பை ஹீரோஸ் எனும் இந்தி நடிகர்கள் அணிக்கும் போட்டி நடக்கிறது. அன்றைய தினம் அதே இடத்தில் இரவு 7 மணிக்கு வீரமராத்தி அணியும் போஜ்புரி அணியும் மோதுகின்றன.
பெங்களூரில்
26ம் தேதி கேரள நடிகர்கள் அணியும், தெலுங்கு நடிகர்கள் அணியும் மாலை 3 மணிக்கு பெங்களூரில் மோதுகின்றனர். 7 மணிக்கு கன்னட நடிகர்கள் அணிக்கும், பெங்கால் டைகர்ஸ் அணிக்கும் போட்டி நடக்கிறது.
துபாயில்
பிப்ரவரி 1ம்தேதி துபாயில் இந்தி, தெலுங்கு, மலையாள நடிகர்கள் அணிகள் மோதுகின்றன.
சென்னை
2ம் தேதி சென்னையில் போஜ்புரி, இந்தி, சென்னை, கன்னட நடிகர்கள் அணிகள் மோதுகின்றன. 22ம் தேதி வரை இப்போட்டிகள் நடக்கிறது. 23ம்தேதி இறுதி போட்டி நடக்கிறது.
கேப்டன் விஷால்
தமிழ் நடிகர்கள் அணியில் விஷால், விக்ராந்த், ஜீவா, விஷ்ணு, சிவா, சாந்தனு, பிரித்வி, ஆர்யா, ஸ்ரீகாந்த், ஷாம், பரத், ஜித்தன் ராமேஷ், ரமணா, உதய் போஸ், வெங்கட் சஞ்சய், நிதின் சத்யா, பிரேம்குமார், ஷரண், சுந்தர்ராமு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.