Don't Miss!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது நடிகை சார்மியிடம் வாலிபர் செய்த வேலைய பாருங்க..!
ஹைதராபாத்: நடிகை சார்மியின் இடுப்பை பிடித்து சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி விழுந்துள்ளது.
சிசிஎல் எனப்படும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி, தெலுங்கு வாரியர்ஸ் அணியிடம் தோற்றது.
இதையடுத்து, நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை சார்மி சென்றிருந்தார். அங்கு 18 வயதுடைய ரசிகர் ஒருவர் சார்மியை அணுகி ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சார்மியும் சம்மதிக்கவே, பக்கத்தில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த வாலிபர். அப்போது திடீரென சார்மியின் இடுப்பை வளைத்து பிடித்துள்ளார். போஸ் கொடுக்கவே அப்படி செய்கிறார் என்று சார்மியும் சும்மா இருந்துள்ளார். ஆனால் இடுப்பை கிள்ளி, தடவி சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார் அந்த வாலிபர்.
இதனால் கடும் கோபம் அடைந்த சார்மி, அலறியடித்தபடி அந்த ரசிகரை பிடித்து தள்ளியுள்ளார். சார்மியின் அலறலை கேட்டு விருந்தில் கலந்து கொண்ட சிலர், அந்த ரசிகருக்கு தர்மஅடி கொடுத்து விரட்டி அடித்தனர்.
இது குறித்து சார்மி கூறுகையில், "எனது பாதுகாவலர்கள் அந்த நபரை அடிக்கும்போதும், அவர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் சைக்கோவாக இருக்கலாமோ என்று நினைத்தேன். இனி என் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவேன். அறிமுகம் இல்லாதவர்களை பக்கத்தில் நெருங்க விட மாட்டேன்" என்றார்.