Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நான் ஒழுக்கமான நடிகை... தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா கடும் கோபம்
கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவி விஜயலட்சுமியை அடித்து காயப்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். சிறையில் அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையடுத்து கணவர் மீது போலீசில் அளித்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். தர்ஷனுக்கும் நடிகை நிகிதாவுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக விஜயலட்சுமி குற்றம் சாட்டினார்.
இப்பிரச்சினை குறித்து கன்னட தயாரிப்பாளர் சங்கம் நேற்று விவாதித்து, தர்ஷன் குடும்ப பிரச்சினைக்கு காரணமான நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் நடிக்க தடை விதித்துள்ளது.
இந்தத் தடையை கடுமையாக எதிர்த்துள்ளார் நிகிதா.
அவர் கூறுகையில், "தர்ஷனுக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்குமான குடும்ப சண்டையில் நான் தேவை இல்லாமல் இழுக்கப்பட்டு உள்ளேன். என் பெயரை களங்கப்படுத்திவிட்டனர். நான் ஒழுக்கமான நடிகை. தர்ஷனுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது அவதூறானது.
நான் சினிமாவில் ஆறு வருடங்களாக இருக்கிறேன். இதுவரை எந்த நடிகருடனும் என்னை இணைத்து பேசியது இல்லை. கன்னட படத்தில் சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடித்துள்ளேன். இங்குள்ள ரசிகர்கள் என் மேல் பிரியம் வைத்துள்ளனர். அப்படிப்பட்ட என்னைப் பற்றி அவதூறு செய்திகள் வருகின்றன.
தர்ஷனுக்கும் எனக்கும் காதல் இருந்ததாக ஏதேனும் ஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா? போலீசில் விஜயலட்சுமி அளித்த புகாரில் எனது பெயரை தேவை இல்லாமல் இழுத்திருப்பதை அறிந்து அதிர்ச்சியானேன். மூன்று வாரங்களுக்கு முன்பு கூட விஜயலட்சுமி என்னுடன் டெலிபோனில் பேசினார். நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்து விசாரித்தார்.
நான் திறமையாக நடிப்பதாக பாராட்டினார். அப்படிப்பட்டவர் என் மேல் புகார் அளித்துள்ளது வியப்பாக உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் நான் நடிப்பதற்கு தடை விதித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. தவறு செய்யாத என்னை தண்டித்து உள்ளனர். இப்பிரச்சினையை சட்டப்படி சந்திப்பேன். என் பக்கம் நியாயம் உள்ளது. யாரோ ஒருவர் வீட்டில் குடும்பப் பிரச்சினை என்பதற்காக, நான் நடிக்கக் கூடாது என்பது என்ன நியாயம்?," என்றார்.