Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹன்சிகா மீது மேனேஜர் பரபரப்பு புகார்!
Recommended Video
சென்னை : நடிகை ஹன்சிகா தனக்கு சம்பளம் தரவில்லை என தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் ஹன்சிகாவிடம் மேனேஜராக பணியாற்றிய முனுசாமி. தற்போது ஹன்சிகாவின் அம்மாவே அவரது கால்ஷீட், சம்பளம் ஆகியவற்றை கவனித்துக் கொள்கிறார்.
சிம்ரன், மாளவிகா உள்பட சில தமிழ் நடிகைகளுக்கு மேனேஜராக இருந்தவர் முனுசாமி. ஹன்சிகாவுக்கும் இவர்தான் மேனேஜராக இருந்தார். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஹன்சிகா மீது புகார் கொடுத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார் முனுசாமி.
"இதுவரை பணியாற்றிய படங்களுக்காக ஹன்சிகா எனக்கு சம்பளம் தரவில்லை. எனவே, அதை வாங்கித்தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா, 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்தவருக்கு, தற்போது பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லை. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'குலேபகாவலி'. தற்போது விக்ரம்பிரபு ஜோடியாக 'துப்பாக்கி முனை' படத்திலும், அதர்வா ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் ஹன்சிகா.
தான் குண்டாக இருப்பதாலேயே வாய்ப்புகள் தொடர்ந்து வரவில்லை என நினைத்து தற்போது மிகவும் ஒல்லியாக மாறியிருக்கிறார் ஹன்சிகா. வேலை பார்த்த மேனேஜருக்கு சம்பளத்தை சரியாகக் கொடுப்பது இல்லையா?