Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காசியில் காலை 4 மணிக்கு என்னை அறிந்தால் முதல் நாள் முதல் காட்சி!
அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் முதல் நாள் முதல் காட்சி கேகே நகரில் உள்ள காசி திரையரங்கில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
படம் வெளியாவதற்கு சில மணி நேரங்கள் முன்பு அல்லது முந்தைய நாள் நள்ளிரவு ரசிகர்களுக்காக சிறப்புக் காட்சி போடும் வழக்கம் ரஜினியின் படங்களிலிருந்துதான் ஆரம்பமானது. குறிப்பாக ஆல்பட் திரையரங்கில் இத்தகைய காட்சிகள் ரொம்பவே பிரபலம்.
இப்போது இந்த மாதிரி முதல் நாள் முதல் காட்சிகள் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் நடத்தப்படுகின்றன.
அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி கேகே நகரில் உள்ள காசி திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு இந்த காட்சியை நடத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
ரசிகர்கள் இந்தக் காட்சியை மேள தாளம் முழங்க, ஏக ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
ரசிகர் மன்றங்களை முற்றாக அஜீத் கலைத்த பிறகும், அவரது ரசிகர்கள் அதே உற்சாகத்துடன் அவர் படங்களை வரவேற்று கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.