Don't Miss!
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரேவதி சீரியலில் சொர்ணமால்யா
ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக நடிகை ரேவதி புதிய தொடர் ஒன்றை தயாரிக்கிறார். அவருடன் நடிகை ரோகினியும் கை கோர்த்துள்ளார். மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் சார்பி்ல் தயாரிக்கப்படும் இந்த சீரியலை சரவணன் இயக்குகிறார்.
இந்தத் தொடருக்கு யாதுமாகி நின்றாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், சொர்ணமால்யா, நீரஜா, ஸ்ரீரேகா என மூன்று நாயகிகள்.
மூன்று பேருக்குமே பவர்புல் கேரக்டர்களாம். இதுகுறித்து ரேவதி கூறுகையில், இந்தக் கதையைக் கேட்டதுமே சீரியலாக தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
மூன்று நடுத்தர வயதுப் பெண்களின் கதை இது. சொர்ணமால்யா, நீரஜா, ஸ்ரீரேகா நடித்துள்ளனர். சமூகப் பிரச்சினைகளையும் இந்தத் தொடர் அலசுகிறது என்றார்.
சொர்ணமால்யா கூறுகையில், இப்படி ஒரு முதிர்ச்சியான பாத்திரத்தை இதுவரை நான் செய்ததில்லை. இந்தக் கதையை என்னிடம் கூறி கேரக்டர் பற்றிக் கூறியதுமே நான் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டேன். அதற்கு இன்னொரு காரணம் ரேவதியின் சீரியல் இது என்பதால். அவர் மிகப் பெரிய புத்திசாலி. அவருடன் இணைவது பெருமையாக உள்ளது என்றார்.