Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மீண்டும் “அம்மா” ஆகும் ஐஸ்வர்யா ராய் பச்சன்??
மும்பை: உலக அழகியாகவும், பலபேரின் கனவு நாயகியாகவும் திகழ்ந்த ஐஸ்வர்யாராய்க்கும், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் மகனும், நடிகருமான அபிஷேக்பச்சனுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் முடிந்துள்ளது. சமீபத்தில்தான் இவர்கள் தங்களது 7 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள்.
ஐஸ்வர்யாராய்க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு "ஆரத்யா" என பெயரிட்டுள்ளனர். குழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யாராய் சினிமாவில் நடிக்கவில்லை.
மீண்டும் நடிக்கும்படி கேட்டு நிறைய இயக்குனர்கள் கதைகளுடன் அணுகினர். ஆனால், எதையும் ஏற்காமல் இருந்தார் ஐஸ். மணிரத்னம் தெலுங்கு, தமிழில் எடுக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
இந்த நிலையில்தான் அவர் மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் ஐஸ்வர்யாராயும், அபிஷேக்பச்சனும் லோக்சபா தேர்தலுக்காக ஓட்டு போட வந்தனர்.
அப்போது ஐஸ்வர்யாராய் வயிறு பெரியதாக இருந்தது. எடையும் கூடியிருந்தது. இதன் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.