சின்ன வயசுல இப்படி ஒரு ஏக்கமா? அச்சச்சோ… வறுமை குறித்து மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா
ஹைதராபாத்: விஜய்யுடன் வாரிசு, அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
இன்னொரு பக்கம் விஜய் தேவரகொண்டாவுடன் காதல் இல்லை என சொல்லிவிட்டு அவருடன் டேட்டிங்கும் சென்று வந்தார்.
இந்நிலையில், ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ராஷ்மிகா மந்தனா, சிறுவயதில் அவருக்கு இருந்த தீராத ஏக்கம் பற்றி மனம் திறந்துள்ளார்.

பிஸி ஷெட்யூலில் ராஷ்மிகா மந்தனா
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா. அப்படியே தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்திலும் நடித்தார். இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் வெளியான புஷ்பா திரைப்படம் ராஷ்மிகாவுக்கு பெரிய அளவில் கம்பேக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இப்போது விஜய்யுடன் வாரிசு, மீண்டும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா 2 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே, விஜய் தேவரகொண்டாவுடன் காதல் இல்லை என மறுத்து வந்த ராஷ்மிகா, அவருடன் மாலத்தீவில் ரவுண்டு அடித்துவிட்டு ஹைதராபாத் திரும்பினர்.

மனம் திறந்த ராஷ்மிகா
இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ராஷ்மிகா மந்தனா தனது சிறுவயது நினைவுகளை அப்படியே மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "நான் சிறுவயதில் இருக்கும் போது குடும்பத்தில் அவ்வளவு கஷ்டம் இருந்தது. எனது அம்மா, அப்பாவிடம் எப்போதுமே பணம் இருக்காது. அந்த நேரத்தில் நாங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீடு மாறும் நிலை இருந்தது. இதனால், நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம்" எனக் கூறினார்.

அவ்வளவு ஏக்கம் இருந்தது
தொடர்ந்து பேசிய ராஷ்மிகா மந்தனா, "சின்ன வயதில் அவ்வளவு கஷ்டம் இருந்த போதும் எனக்கு ரொம்பவே சுதந்திரம் கொடுத்து என் பெற்றோர் வளர்த்தனர். நான் எது கேட்டாலும் இல்லை என சொல்ல மாட்டார்கள். ஆனால் எங்களிடம் ஒரு பொம்மை கூட வாங்க பணம் இருக்காது. அதற்காக நான் பலமுறை ஏங்கியிருக்கிறேன். அதனால், இப்போது நான் என்னை முழுமையாக உணர்ந்துள்ளேன், இந்தப் பணமும் வாழ்வும் நிரந்தரம் கிடையாது என்பது எனக்குத் தெரியும்" என தெளிவாகப் பேசியுள்ளார். ராஷ்மிகாவின் இந்த பேட்டி அவரது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட், பாலிவுட்
பட்ட கஷ்டங்களையெல்லாம் மறந்து இன்று தன்னம்பிக்கையுடன் பயணித்து வரும் ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த 'குட்பை' என்ற படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, இப்போது ரன்பீர் கபூருடன் 'அனிமல்' படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், மிஷன் மஜ்னு என்ற இந்தி படத்திலும் கமிட் ஆகியுள்ளார். தமிழில் தனுஷுடன் விரைவில் ராஷ்மிகா ஜோடி சேரவுள்ளதாகக் கூறப்படுகிறது. சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படத்தில் தனுஷுடன் ராஷ்மிகாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











