த்ரிஷா பல காலமாக எதிர்பார்த்த விஷயம் நடந்துவிடும் போல் இருக்கிறது
சென்னை: த்ரிஷாவின் கனவு நிறைவேற நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
த்ரிஷா அனைத்து பெரிய ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். தற்போது உள்ள இளம் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். உலக நாயகனுடன் நடித்த த்ரிஷாவுக்கு ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது பல நாள் ஆசை.
அந்த ஆசையை அவர் பல முறை வாய்விட்டு கூறிவிட்டார்.

த்ரிஷா
ரஜினி பட அறிவிப்பு வரும்போது எல்லாம் தன்னை ஹீரோயினாக போட மாட்டார்களா என்று த்ரிஷா எதிர்பார்ப்பது வழக்காமகிவிட்டது. இந்நிலையில் தான் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜ்
காலா படத்தை அடுத்து ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கும் திட்டம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

அஞ்சலி
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, அஞ்சலி ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

கால்ஷீட்
கட்சி துவங்க தயாராகிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜுக்கு 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். சினிமா ஸ்டிரைக் முடிந்த உடன் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











