செல்வராகவன் பட்ட அவமானம்.. பதிலடி கொடுத்த தனுஷ்.. கடந்து வந்த பாதை!
சென்னை : செல்வராகவனை பிரபல நடிகை அவமானப்படுத்திய சம்பவம் இணையத்தில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
சாணிக்காயிதம், விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் செவ்வராகவன் வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நானே வருவேன் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

செல்வராகவன்
செல்வராகவன் இயக்குநராக மட்டும் இல்லாமல், நடிகராகவும் பலத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சினிமாத்துறையில் அவர் சந்தித்த அவமானத்தை சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ளார். திருமலை படத்தில் விஜய் ஒரு அழகான வசனத்தை பேசியிருப்பார். அதாவது, வாழ்க்கை ஒரு வட்டம்டா...இன்று ஜெயிக்கிறவன் தோற்பான்... தோற்பவன் ஜெயிப்பான் என்று. இந்த வசனம் தற்போது செல்வராகவனுக்கு உண்மையாகி உள்ளது. கஸ்தூரி ராஜாவின் மகனாக இருந்தாலும் செல்வராகவன் போராடியே முன்னுக்கு வந்துள்ளார்.

மனமுடைந்த செல்வராகவன்
80களில் முன்னணி நடிகையாக இருந்த வைஜெயந்தி மாலா தனது மகனை திரைத்துறையில் அறிமுகமாக்க முடிவு செய்திருந்தார். இதற்காக வைஜெயந்தி மாலா நல்ல கதையை எதிர்பார்த்து இருந்தார். அப்போது வைஜெயந்தி மாலாவின் வீட்டிற்கு செல்வராகவன் சென்றுள்ளார். ஆனால், வைஜெயந்தி மாலா கதையைக்கூட கேட்காமல் அவரை அவமானப்படுத்தி உள்ளார். இதனால், மனமுடைந்து போனார் செல்வராகவன்.

தரமான திரைப்படம்
இதையடுத்து, தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக அமைந்து தனுஷ் மற்றும் செல்வராகவனுக்கு திரைத்துறையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்தை அடுத்து 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற தரமான படங்களை இயக்கினார்.

நடிப்பின் மூலம் பதிலடி
செல்வராகவன் உச்ச இயக்குநராக மாறியதை அடுத்து, வைஜெயந்தி மாலா மீண்டும் அவரை தொடர்பு கொண்டு தனது மகனை வைத்து படத்தை இயக்குமாரு கேட்டுள்ளார். அதற்கு செல்வராகன் மறுத்துவிட்டாராம். காதல் கொண்டேன் என்ற படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற தனுஷின் ஆக்ரோஷமான நடிப்பு ஒரு காரணம். அண்ணனை அவமானப்படுத்திய நடிகைக்கு தனுஷ் நடிப்பின் மூலம் பதலடி கொடுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











