விஜய்க்கு ஆதரவு.. முதலமைச்சரை அங்கிள்னு சொன்ன என்னதப்பு.. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிறாரா மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான் ஸ்டாலின் அங்கிள் சர்ச்சை, விஜயகாந்த் உடனான தனது அனுபவங்கள், சம்ஸ்கிருதத்தில் ஆயிரம் கோடி பட கனவு, மற்றும் நாய்கள் மீதான தனது கருத்துக்கள் பற்றி இந்த நேர்காணலில் மனம் திறக்கிறார். அவரது அரசியல் நாகரீகம், அதிகாலை பழக்கங்கள், மற்றும் கலை மீதான ஆழமான பார்வை ஆகியவை இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன.

சென்னை: கடந்த 21ஆம் தேதி மதுரையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், அவரது கட்சியின் இரண்டாவது மாநாட்டை நடத்தினார். அதில் அவர் பேசும் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அங்கிள் என்று அழைத்தார். அவர் அங்கிள் என்று அழைத்தது முதலமைச்சரை பகடி செய்வது போல உள்ளது. இது அரசியல் நாகரீகமல்ல என பல அரசியல் கட்சித் தலைவர்கள் விஜய் மீது விமர்சனம் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் ஒன் இந்தியா தமிழ் செய்தி நிறுவனம் மற்றும் ஃபிலிமி பீட் யூடியூப் தளத்திற்கு பேட்டி அளித்த மன்சூர் அலிகான், விஜய்க்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த பேட்டியில், "ஸ்டாலின் அங்கிள்"னு சொன்னா என்ன தப்புன்னு மன்சூர் அலிகான் கேள்வி கேட்டதுதான் இந்த நேர்காணலின் ஹைலைட். அரசியல் நாகரீகம் பத்தி அவர் பேசினது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வார்த்தையில அப்படி என்ன தப்பு இருக்குன்னு அவர் கேட்கும் போது, ஒரு கணம் எல்லாரும் யோசிச்சுதான் போயிட்டாங்க.

காலையில நாலு மணிக்கு எப்படி எந்திரிக்கிறீங்கனு கேட்டா, எங்க அப்பா பழக்கின பழக்கம்னு சொல்றாரு. பழைய சோறு, உப்பு கருவாடு தொட்டுக்கிட்டு வேலையில கிளம்புவாரு. அவர் ஒரு manpower ஏஜென்ட், வட மாநிலங்களில் நிறைய பேருக்கு வேலை வாங்கி கொடுத்திருக்காரு. அந்த பழக்கம் அப்படியே வந்துடுச்சுன்னு மன்சூர் அலிகான் சொல்றாரு.

Photo Credit:

மரத்தைப் போல அரசியல்வாதிகள்: அகம் பிரம்மாஸ்மினு ஒரு புது ஆல்பம் வெளியிட்டிருக்காரு. "உனக்குள்ளேயே கடவுள் இருக்கார்"னு அந்த வார்த்தைக்கு அர்த்தம். மரங்கள் நிழல் தருவது போல, தலைவர்கள் மக்களுக்காக அர்ப்பணிக்கணும்னு அவர் சொல்றாரு. அரசியல்வாதிகள் மரத்தைப் போல தன்னை வருத்திக் கொண்டு மக்களுக்கு நிழல் தந்தால், அமெரிக்காவே நம்ம காலடியில வந்து கிடக்கும்னு நம்பிக்கையோட சொல்றாரு மன்சூர் அலிகான்.

வாழ்நாள் லட்சியம்: சான்ஸ்கிரிட்ல ஒரு படம் எடுக்கணும்னு ஆசை இருக்குன்னு சொல்றாரு. ஆயிரம் கோடிக்கு மேல செலவாகும்னாலும், அது தன்னோட லட்சியம்னு சொல்றாரு. மொழி, இனம், ஜாதி எல்லாம் கலைக்கு கிடையாதுன்னு அவர் சொல்றதுல ஒரு ஆழமான அர்த்தம் இருக்கு.கேப்டன் பிரபாகரன் படத்துல எப்படி கமிட் ஆனீங்கன்னு கேட்டா, அது ஒரு சுவாரஸ்யமான கதைன்னு சொல்றாரு. பாலு ஆனந்தம்தான் அறிமுகம் செஞ்சு வச்சாரு. ராவுத்தர் சார்கிட்ட போனதும், ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தாராம். அந்த வாய்ப்பு எப்படி வந்துச்சுன்னு அவர் விவரிக்கும்போது ஆச்சரியமா இருக்கு.

கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ்: விஜயகாந்த் சார்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டதா சொல்றாரு. அதிகாலையில எந்திரிக்கிறது, உடற்பயிற்சி செய்றது எல்லாத்தையும் அவர்கிட்ட கத்துக்கிட்டாராம். கேப்டன் மேல அவர் வச்சிருக்க அன்பையும், மரியாதையும் வெளிப்படையா காட்டுறாரு மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸில் படம் பார்க்கும்போது கண்ணீரே வந்துடுச்சு என்றும் சொல்றாரு. நாய்களுக்கு கோர்ட் தடை போட்டது பத்தி கேட்டா, அது வரவேற்கப்பட வேண்டியது இல்லன்னு சொல்றாரு. விலங்கு விலங்கு தானே, வீட்ல வச்சு வளர்த்தா ஆபத்து இருக்குன்னு சொல்றாரு. அதே நேரம், நன்றியுள்ள ஜீவன் நாய்னு அவர் சொல்றதுல ஒரு உண்மையும் இருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X