Don't Miss!
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
தீபாவளிக்கு இல்லை... தள்ளிப் போனது ரஜினியின் 2.ஓ மெகா படம்!
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினியின் மெகா படமான 2.ஓ வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது தள்ளிப்போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில், ஒரு பாடல் மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இயக்குநர் ஷங்கர் தீவிரமாக உள்ளார்.
ஆசியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம், தீபாவளி ரிலீசாக வெளியாக இருந்தது.
ஆனால் படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளை உலகத் தரத்துக்கு செய்ய வேண்டியிருப்பதால் படத்தை தீபாவளிக்கு வெளியிடாமல், அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப் போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் கிரியேடிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 2018-ல் குடியரசு தினத்துக்கு ஒரு நாள் முன்பாக படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் தயாராவது குறிப்பிடத்தக்கது.