Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
படுக்கைக்கு அழைத்தால் என்ன, வேலை கிடைக்கிறதல்லவா: பெண் டான்ஸ் மாஸ்டர் கொச்சை பேச்சு
மும்பை: படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார் பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான்.
பாலிவுட்டில் பிரபலமான நடன இயக்குனர் சரோஜ் கான்(69). அவர் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறு இல்லை. அவ்வாறு அழைப்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரோஜ் கான் கூறியிருப்பதாவது,
சினிமா
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் காலகாலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு பெண்ணுடனும் நெருக்கமாக இருக்க அனைவரும் முயற்சிக்க தான் செய்வார்கள்.
அதிகாரிகள்
ஏன் அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூட தான் இதை செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது சினிமா துறையை மட்டும் குறி வைப்பது ஏன்?. சினிமா துறை வேலையாவது கொடுக்கிறது அல்லவா?. பலாத்காரம் செய்துவிட்டு தனித்துவிடுவது போன்று இல்லை.
விருப்பம்
படுக்கைக்கு செல்வது பெண்ணை பொருத்தது. வேண்டாம் என்று நினைத்தால் வேண்டாம். சினிமா துறை பற்றி எதுவும் கூறாதீர்கள். அது எங்கள் அம்மா-அப்பா போன்றது என்றார் சரோஜ் கான்.
மாதுரி
தேசிய விருது வாங்கிய சரோஜ் கான் ஏக் தோ தீன், சோலி கே பீச்சே உள்ளிட்ட பிரபல பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார். அவர் இப்படி பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நடிகைகள்
பாலிவுட்டில் நடிககைளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக ஒவ்வொருவராக தெரிவித்து வருகிறார்கள். நடிகை ராதிகா ஆப்தே இது குறித்து துணிச்சலாக பேசிய நிலையில் சரோஜ் கான் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.