Don't Miss!
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மோசடி, கொலை மிரட்டல் வழக்குகளில் சக்சேனாவுக்கு நிபந்தனை ஜாமீன்!
வல்லகோட்டை படத்தை தயாரித்த டி.டி.ராஜா கொடுத்த ரூ 1.25 கோடி மோசடி மற்றும் 'சிந்தனை செய்' என்ற படத்தின் கிராபிக்ஸ் டிசைனர் அருள்மூர்த்தி கொடுத்த ரூ.11 லட்சம் மோசடி ஆகிய வழக்குகளின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சக்சேனா மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஏற்கெனவே தீராத விளையாட்டுப் பிள்ளை பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த சக்சேனாவை, இந்த வழக்குகளிலும் சக்சேனா கைது செய்தனர்.
இவற்றில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.தேவதாஸ் விசாரித்தார். பின்னர் சக்சேனாவுக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். சக்சேனா மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் போலீசில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
ஏற்கெனவே இருவ வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இப்போது அடுத்த இரு வழக்குகளில் சக்சேனாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
ஆனாலும் இன்னும் இரு வழக்குகள் அவர் மீது விசாரணையில் உள்ளதால் சக்சேனா தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இரு வழக்குகளிலும் சக்சேனாவை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை பெருநகர 23-வது கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று மாலை மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி முன்பு வந்தது.
அப்போது அரசு தரப்பு வக்கீல் கோபிநாத், 'சக்சேனா மீதான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்படுகின்றன. இதனால் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்' என்றார். இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று (புதன்கிழமை) பிற்பகலுக்கு மாஜிஸ்திரேட்டு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்