Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'விஜய்யோட போட்டோ எடுக்கணுமா... ரூ 2 ஆயிரம் கொடுங்க..' - இப்படி ஒரு வசூல் வேட்டை!!
'விஜய் வருகிறார்... அவருடன் போட்டோ எடுத்துக்க ரூ 2000 கொடுங்க' என கூவிக் கூவி வசூல் செய்த கும்பலைத் தேடி வருகின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.
இதுகுறித்து சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் தமிழன் ஆ.பார்த்தீபன் வெளியிட்டுள்ள அறிக்கை:
போட்ட எடுக்க டேட்
நடிகர் விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தன்னுடன் போட்டோ எடுப்பதற்கான தேதியை அறிவித்துள்ளார். ஆனால் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதால் சேலம் மாவட்டத்திற்கான தேதியை இன்னும் அவர் அறிவிக்கவில்லை.
வசூல் வேட்டையில் சிலர்
இதைப் பயன்படுத்தி சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, கொண்டலாம்பட்டி, மல்லூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை நேரில் அழைத்துச் சென்று நடிகர் விஜயுடன் போட்டோ எடுத்து தருவதாக கூறி ரூ.1000, ரூ.2000 ஆயிரம் என வசூல் வேட்டையில் சிலர் ஈடுபட்டு வருவதாக மாவட்ட தலைவருக்கு புகார்கள் வந்துள்ளன.
பிடித்து ஒப்படையுங்கள்
ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் மோசடி கும்பல் போனில் பேசினாலோ அல்லது நேரில் வந்து பணம் வசூல் செய்தாலோ மாவட்ட தலைமை அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த மோசடி கும்பலை பிடித்து ஒப்படைக்க வேண்டும்.
தேதி அறிவித்த பிறகு சொல்கிறோம்
சேலம் மாவட்ட ரசிகர்களுக்கு தேதி அறிவித்த பிறகு மாவட்ட தலைமை மூலம் அனைவருக்கும் தகவல் கொடுக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.