Just In
- 8 min ago
அக்ரிமென்ட்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவிட்டல் ரசிகர்கள் ஷாக்!
- 16 min ago
'என்ன இவரும் இப்படி கிளாமர்ல இறங்கிட்டாப்ல..' வைரலாகும் நடிகை பூனம் பஜ்வாவின் 'ஜில்' போட்டோஸ்!
- 25 min ago
எனக்கு விழுற ஒரு ஒரு ஓட்டும் கப்புதான்.. ரன்னர் அப் பாலாஜியின் முதல் பதிவு.. என்னென்னு பாருங்க!
- 32 min ago
தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் தமன்னா... குஷியில் ரசிகர்கள்!
Don't Miss!
- News
என் கடைசி ஆசை இதுதான்.. திமுகவின் கிராம சபை கூட்டத்தில் உருக்கமாக பேசிய துரைமுருகன்
- Sports
2021 ஆசியா கோப்பையிலுருந்து விலக முடிவு.. இந்திய அணி திடீர் திட்டம்.. யாருக்கு வைக்கப்பட்ட செக்!?
- Lifestyle
பெண்களே! இந்த காலத்தின்போது உங்க உடல் எடை அதிகரிக்குமாம்... கவனமா இருங்க..!
- Finance
15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..!
- Automobiles
உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை, சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ட்விட்டரில் மாஸ் காட்டிய விஜய்யின் அந்த செல்ஃபி.. மிரட்டல் சாதனை.. அதிகாரபூர்வ அறிவிப்பு!
சென்னை: மாஸ்டர் ஷூட்டிங்கின் போது, நடிகர் விஜய் வெளியிட்ட செல்ஃபி போட்டோ, 2020ஆம் ஆண்டில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட போட்டோவாக ட்விட்டர் அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'மாஸ்டர்'. விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடித்துள்ளார்.
கால்களை மேலே அப்படி தூக்கி.. ஆஹா, இது என்ன ஸ்டைலு? மாலத்தீவில் இருந்து மற்றொரு நடிகை மிரட்டல் போஸ்
மாளவிகா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு உட்பட பலர் நடித்துள்ளனர்.

நெய்வேலி ஷூட்டிங்
இதன் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தபோது, நடிகர் விஜய் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்காக, நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து நடிகர் விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்தனர். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. சோதனைக்குப் பின் நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டார் விஜய்.

பேருந்தில் ஏறி
இந்த வருமான வரி சோதனைக்குப் பிறகு, நடிகர் விஜய்யைப் பார்க்க அதிக அளவில் ரசிகர்கள் நெய்வேலியில் கூடினர். ஷூட்டிங் நடந்த பகுதியில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய், படப்பிடிப்புத் தளத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது ஏறி ரசிகர்கள் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்தார், விஜய்.

அதிகாரபூர்வ கணக்கு
இந்த செல்ஃபி, நடிகர் விஜய்யின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இது வைரலானது. ஏராளமான ரசிர்கள் இதை ரீட்வீட் செய்தனர். இந்நிலையில், இந்த செல்ஃபி ட்விட்டரில் இந்திய அளவில் அதிகமானவர்களால் ரீ-ட்வீட் செய்யப்பட்டது என்று கடந்த சில தினங்களுக்கு முன், அறிவிக்கப்பட்டது.

அதிமான ரீ-ட்வீட்
இதை விஜய் ரசிகர்கள், தனி ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் கொண்டாடினர். இந்நிலையில் அந்த செல்ஃபி புகைப்படம், 2020 ஆம் ஆண்டில் அதிகமானவர்களால் ரீ-ட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் என ட்விட்டர் நிறுவனம், இப்போது அறிவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனம்
இதை அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து நடிகர் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். இதற்காக #VIJAYRuledTwitter2020 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர். அதில், தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.