Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கிளாடியேட்டர் மாதிரி ஆக்ஷன் அட்வென்ச்சர் படம் புலி! - தயாரிப்பாளர்
ஹாலிவுட் படமான கிளாடியேட்டர் போல ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக உருவாகியுள்ளது விஜய்யின் புலி என்கிறார் அதன் தயாரிப்பாளர்கள் ஷிபு தமீம் மற்றும் பிடி செல்வகுமார்.
விஜய்யின் புலி ஒரு அதியுச்ச கற்பனைப் படம் (பேன்டஸி) என்று கூறப்பட்டு வந்தது. அந்த அதியுச்ச கற்பனை எப்படி இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர்கள் பிடி செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் ஒரு அறிக்கை மூலம் கூறியுள்ளனர்.
அந்த அறிக்கை:
ரஸ்ஸல் குரோவ் நடித்த தி கிளேடியேட்டர் ஹாலிவுட் திரைப்படத்தைப் போன்ற ஆக்சன் அட்வென்ச்சர் படமாக புலி இருக்கும்.
விஜய்யின் கேரியரில் இந்தப் படம் முக்கியமானதாக அமையும்.
தென்னிந்திய மக்கள் ஒவ்வொருவரும் ஸ்ரீதேவி தமிழில் மீண்டும் நடிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர் உண்மையில் இங்கு பிரபலமிக்கவர். அவரை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் அணுகியிருப்பர். ஆனால், புலி படத்தின் திரைக்கதையினை கேட்டு அதில் நடிக்க அவர் ஒப்பு கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அதிக பலம் மற்றும் அதிகாரங்கள் கொண்ட ஒரு குழுவின் தலைவியாக ஸ்ரீதேவி இதில் நடிக்கிறார்," என்று தெரிவித்துள்ளனர்.