Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சம்பாதிச்சது போதுங்க... இனி புதியவர்கள் வரட்டும்! - கானா பாலா
வருமான விஷயத்தில் போதும் என்று சொல்லும் மனசு அத்தனை சுலபத்தில் யாருக்கும் வந்துவிடுவதில்லை.
ஆனால் கானா பாலா சம்பாதிச்ச வரைக்கும் போதும் என்று கூறி ஆச்சர்யப்படுத்துகிறார்.
'பதினோரு பேரு ஆட்டம்...' என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் கானா பாலா. 'அட்டகத்தி' படத்தில் இவர் பாடிய ‘ஆடி போனா ஆவணி...', ‘நடுகடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா...' பாடல்கள் இவரை முன்னணி பாடகராக்கின. சில படங்களில் அவரே தோன்றி நடிக்கவும் நடனமாடவும் செய்கிறார்.
கானா பாலா இதுவரை 75 படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். மேலும் 300க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். நிறைய பேருக்கு சத்தமில்லாமல் உதவியும் வருகிறார் பாலா.
இப்போது கானா பாடல்கள் எழுதுவதை, பாடுவதை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம்.
ஏன் இந்த முடிவு?
கானா பாலா சொல்கிறார்:
"நிறைய பாடல்கள் பாடிவிட்டேன். நான் நன்றாக சம்பாதித்தும்விட்டேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், என்னைப் போல் பல பாடகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களின், முன்னேற்றத்திற்காக பாடல்கள் எழுதுவதையும், பாடுவதையும் குறைத்து வருகிறேன். எனக்காகவே வரும் வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன்," என்றார்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?