twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சம்பாதிச்சது போதுங்க... இனி புதியவர்கள் வரட்டும்! - கானா பாலா

    By Shankar
    |

    வருமான விஷயத்தில் போதும் என்று சொல்லும் மனசு அத்தனை சுலபத்தில் யாருக்கும் வந்துவிடுவதில்லை.

    ஆனால் கானா பாலா சம்பாதிச்ச வரைக்கும் போதும் என்று கூறி ஆச்சர்யப்படுத்துகிறார்.

    Gana Bala's new decision

    'பதினோரு பேரு ஆட்டம்...' என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் கானா பாலா. 'அட்டகத்தி' படத்தில் இவர் பாடிய ‘ஆடி போனா ஆவணி...', ‘நடுகடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா...' பாடல்கள் இவரை முன்னணி பாடகராக்கின. சில படங்களில் அவரே தோன்றி நடிக்கவும் நடனமாடவும் செய்கிறார்.

    கானா பாலா இதுவரை 75 படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். மேலும் 300க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். நிறைய பேருக்கு சத்தமில்லாமல் உதவியும் வருகிறார் பாலா.

    இப்போது கானா பாடல்கள் எழுதுவதை, பாடுவதை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம்.

    ஏன் இந்த முடிவு?

    கானா பாலா சொல்கிறார்:

    "நிறைய பாடல்கள் பாடிவிட்டேன். நான் நன்றாக சம்பாதித்தும்விட்டேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், என்னைப் போல் பல பாடகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களின், முன்னேற்றத்திற்காக பாடல்கள் எழுதுவதையும், பாடுவதையும் குறைத்து வருகிறேன். எனக்காகவே வரும் வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன்," என்றார்.

    English summary
    Singer Gana Bala has decided to reduce the number of songs he singing for movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X