Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்னா ஒரு ஆட்டம்... ஜோதிலட்சுமி வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஜெ.வே திணறிய காட்சி!
சென்னை: அடிமைப் பெண் படத்தில் வரும் காலத்தை வென்றவன் நீ பாடலில் ஜோதிலட்சுமியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டு நடனமாடியிருப்பார்கள். அதில் ஜோதிலட்சுமியின் வேகத்திற்கு இணையாக ஆட முடியாமல் ஜெயலலிதா திணறியிருப்பதைக் காண முடியும்.
1963ம் ஆண்டு வெளியான பெரிய இடத்துப் பெண் படம் மூலம் நடிகையான ஜோதிலட்சுமி ரத்த புற்றுநோயால் அவத்திப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று மரணம் அடைந்தார். நடனமாடுவதற்கு பெயர் போனவர் ஜோதிலட்சுமி.
எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் வரும் காலத்தை வென்றவன் நீ பாடலுக்கு ஜோதிலட்சுமியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டு நடனம் ஆடியிருப்பார்கள். ஜோதிலட்சுமியோ இடுப்பை வளைத்து துள்ளலாக ஆடியிருப்பார்.
ஜெயலலிதா ஜோதிலட்சுமியின் வேகத்திற்கு இணையாக ஆட முடியாமல் சற்றே திணறியிருப்பார். ஜோதிலட்சுமியின் ஆட்டத்தை ஜெயலலிதா தனது முகபாவத்தால் சரி செய்திருப்பார். ரிஷாக்காரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பம்பை உடுக்கை கட்டி பாடலுக்கு அம்சமாக ஆடியிருப்பார் ஜோதிலட்சுமி.
இதுதான் அந்தப் பாடல்
ஜோதிலட்சுமியின் நடனம் எம்.ஜி.ஆருக்கு மிகுவும் பிடிக்கும். இதனாலேயே தனது படங்களில் ஜோதிலட்சுமிக்கு என ஒரு பாட்டை கொடுத்து ஆட வைத்து வந்தார்.