Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாலுமகேந்திரா, ராம.நாராயணன், பாலச்சந்தர்... தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களை பறிகொடுத்த 2014
சென்னை: பாலு மகேந்திரா, பாலச்சந்தர் உள்ளிட்ட முன்னணி தமிழ் திரைப்பட கலைஞர்கள் 2014ல் விண்ணுலகம் சென்றுள்ளனர். அதில் பெரும்பாலானோர் படைப்புகள் காலம் கடந்தும் சாகா வரம் பெற்றவை. அந்த இமயங்களின் பெயர்களை அவர்களின் படைப்புகள் எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். அந்த வகையில் இறந்தும் சாகாவரம் பெற்றவர்கள்தான் இந்த கலைஞர்கள். ஆம்.. கலைஞர்கள் மறையலாம், ஆனால் அவர்களின் கலை என்றுமே மறவாதது.
பாலுமகேந்திரா
ஜனவரி 6ம்தேதி நடிகர் உதயகிரண் தனது 33 வயது வயதில் தற்கொலை செய்து கொண்டார். பொய், பெண் சிங்கம், சித்திரம், வம்பு சண்டை போன்ற படங்களில் இவர் நடித்தார். பிப்ரவரி 14ம்தேதி, ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும், தடம் பதித்த பாலுமகேந்திரா அவரது 74வது வயதில் மரணமடைந்தார். ஆனால் மூன்றாம் பிறை, வீடு போன்றவை என்றைக்கும் பாலுமகேந்திராவை நினைவுபடுத்தும் சாகா வரம் பெற்ற கலை பொக்கிஷங்களாக நிலைத்துள்ளது.
கொடுக்காப்புளி, சொர்ணாக்கா
ஜூன் 12ம்தேதி காமெடி நடிகரான கொடுக்காப்புளி செல்வராஜ் அவரது 56வது வயதில் மறைந்தார். ஜூன் 13ம்தேதி, தூள் படத்தில் சொர்ணாக்கா கேரக்டரில், தூள் கிளப்பிய தெலுங்கானா சகுலந்தலா மறைந்தார்.
இராம.நாராயணன்
ஜூன் 22ல் 120 படங்களுக்கு மேல் இயக்கி சாதனை படைத்தவரும், 75 படங்களுக்கு மேல் தயாரித்தவருமான இராம.நாராயணன், அவரது 66வது வயதில் இறந்தார். இவர் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
காதல் தண்டபானி
ஜூலை 20ம்தேதி, காதல் படத்து வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த தண்டபானி அவரது 71வது வயதில் இறந்தார். பெரும் வெற்றி பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட தமிழ், தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
சுருளி மனோகர், கைலாசம்
ஆகஸ்ட் 7ம் தேதி, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிகமுகமான சுருளி மனோகர் உயிரிழந்தார். ஆகஸ்ட் 16ம்தேதி, இயக்குநர் பாலச்சந்தரின் மகன் தயாரிப்பாளர் கைலாசம் இறந்தார்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன்
அக்டோபர் 24ம்தேதி, லட்சிய நடிகர் என்று புகழப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவரது 86வது வயதில் இறந்தார்.
பாலச்சந்தர்
நவம்பர் 18ம்தேதி, இயக்குநர் ருத்ரய்யா உயிரிழந்தார். அவள் அப்படித்தான், கிராமத்து அத்தியாயம் போன்ற படங்கள் மூலம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குநராக போற்றப்படுபவர் இவராகும். டிசம்பர் 23ம்தேதி இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் உயிரிழந்தார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!