Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பிரமாண்ட மர்மயோகி - கமல்
கலைத் தாகத்தோடு திரையுலகை வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன், தசாவதாரத்தை முடித்த கையோடு மர்மயோகிக்குப் போய் விட்டார். அது தொடர்பான பூர்வாங்கப் பணிகளில் மும்முரமாக இருக்கும் கமல்ஹாசன், தனது மர்மயோகி எப்படிப்பட்ட படம் என்பதை விளக்கியுள்ளார்.
இது மிகப் பிரமாண்டமான படமாக இருக்கும். முற்றிலும் வரலாற்று கதை. தசாவதாரத்தை விட இந்தப் படத்தில் இசை முக்கியத்துவம் உடையதாக இருக்கும்.
7வது நூற்றாண்டில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் கதையின் கரு.
இது வரலாறும், அறிவியலும் கைகோர்க்கும் படமாக இருக்காது. முற்றிலும் வித்தியாசமான முயற்சி. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சேவைக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அவரது விருப்பத்திற்கேற்ப இதில் இசையமைக்கும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
ஆரம்பத்தில் பட்ஜெட் ரூ. 100 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. இப்போது அதையும் தாண்டிப் போய் விட்டது. இந்திய திரையுலக வரலாற்றில் இது புதிய சாதனை படைக்கும். ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
மர்மயோகி குறித்து மீடியாக்களில் நிறைய செய்திகள் வருகின்றன. அவை அனைத்தையும் நான் மறுக்க மாட்டேன், மீடியா நண்பர்களை ஏமாற்ற மாட்டேன்.
மீடியாக்களில், மும்பையில் பிரமாண்டமான முறையில் தொடக்க விழா இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. உண்மையில் முதலில் அப்படி ஒரு திட்டமே என்னிடம் இல்லை. ஆனால் இப்போது மீடியாக்களில் வந்துள்ளதைப் போலவே, பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மத்தியில் பிரமாண்டமான முறையில் மர்மயோகியின் தொடக்க விழா இருக்கும்.
தசாவதாரம் குறித்து இரு வித கருத்துக்கள் நிலவுகின்றன. அப்படத்தில் சில தவறுகள் இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். அதை நான் மறைக்க விரும்பவில்லை. ஆனால் அனைத்து திறமையாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஏற்படக் கூடிய ஒன்றுதான் இது. அது எனக்கும் ஏற்பட்டுள்ளது. அவ்வளவுதான்.
உண்மையில் இந்தத் தவறுகளை அடுத்து படத்தில் திருத்திக் கொள்ள எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார் கமல்ஹாசன்.
கமலை மட்டும் பார்த்தால் குறைகள் தெரியாது!