Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கட்டாயம் ஜிம்முக்கு போங்க… சிவகார்த்திகேயன் அட்வைஸ் !
Recommended Video
சென்னை : இன்றைய உணவுப்பழக்கத்திற்கு கட்டாயம் உடற்பயிற்சி அவசியம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் நடைப்பெற்ற ஒரு தனியார் உடற்பயிற்சி கூட விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கபட்டது. அதன்பின் கேக் வெட்டி உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் சிவாகார்த்திகேயன்.
அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன் முன்னெல்லாம் ஜிம் போனாலே அர்னால்டு ஆகிவிடுவேன் என்று நினைத்து இருந்தேன். அதுமட்டுமின்றி அர்னால்டு போல் உள்ளவர்களுக்கு மட்டும் தான் ஜிம் என்றும் நினைத்து இருந்தேன். அதன்பின் தான் தெரிந்தது ஜிம் என்பது எல்லோருக்குமானது. இன்றைய சூழ்நிலையில் எடுக்கப்படும் உணவுப் பழக்கங்கள் மற்றும் மனவலிக்கு கட்டாயம் ஜிம் அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.
நான் உடற்பயிற்சியில் மிகவும் சோம்பேறி ஜிம் சேர்ந்த மறுநாளே நின்று விடுவேன் என்று நகைச்சுவையாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அடிப்படையை ஒழுங்காக கற்றுக்கொண்டு, ஜிம் சென்று கொண்டிருக்கிறேன் என கூறினார். மேலும், உடற்பயிற்சியாளர்கள் மருத்துவர்களுக்கு இணையானவர்கள் ஆயுளை நீட்டிக்கும் உடற்பயிற்சியை அவர்கள் சிறந்த முறையில் கற்று தந்து பலரின் வாழ்வை மாற்றி இருக்கின்றனர் என்று சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார் .
தனது உடற்பயிற்சியாளர் பற்றி பேசிய சிவகார்த்திகேயன். என்னுடைய பயிற்சியாளர் எப்போதும் கூறுவது உடற்பயிற்சி என்பது உடலை கட்டுகோப்பாக வைக்க வெறும் 30 சதவீதம் தான் உதவுகிறது, நாம் தூங்கும் அளவும் மற்றும் உணவுப்பழக்கம் தான் நம் உடலை தீர்மானிக்கிறது என்று கூறுவார். அதை நாம் கட்டாயம் பின் பற்ற வேண்டும் என்றார்.
சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.