அரவிந்த்சாமியைத் தொடர்ந்து வில்லனான அப்பாஸ்
சென்னை: போன தலைமுறை அமுல் பேபிகள் எல்லாம் கொடூர வில்லனாகும் காலம் இது.
ஒரு காலத்தில் பெண்களின் அபிமான ஹீரோவாக விளங்கிய அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார். அவரது நடிப்பாலேயே அந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

அரவிந்த் சாமியைத் தொடர்ந்து அப்போதைய சாக்லேட் பேபி அப்பாஸும் கொடூர வில்லனாக நடிக்கிறார். சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அப்பாஸ் விளம்பரங்களில் மட்டும் தலைகாட்டி வந்தார்.
பச்ச கள்ளம் என்னும் மலையாள படத்தின் ரீமேக்கில் பெண்களை கடத்தி பலாத்காரம் செய்து கொல்லும் கொடூர வில்லன் வேடமாம்.
தமிழ் படத்துக்கு 'கண்களால் ஒரு கவிதை' என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications