'நாலு நாள்ல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடும். எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளிடா!’
-இந்த பஞ்ச் வசனத்தைப் பேசப் போகிறவர், அஜீத். கவுதம் மேனன் இயக்க, ஏஏம் ரத்னம் தயாரிக்கும் படத்தில்தான் இந்த முத்திரை வசனம் இடம்பெறப் போகிறது.
இந்தப் படம் குறித்து ஆனந்த விகடனுக்கு கவுதம் மேனன் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி...

சூர்யாவுடன் 'துருவ நட்சத்திரம்' டிராப் ஆன ஒரு வாரம் கழிச்சு, 'அஜித் படத்தை நீங்க டைரக்ட் பண்ணணும்'னு சொன்னாங்க. அஜித் சாரும் ரத்னம் சாரும் பேசி கன்ஃபர்ம் பண்ணாங்க. ஆனா, 'இதுதான் கதை'னு ஒன்-லைன்கூட அப்ப என்கிட்ட இல்லை.
'அவசரம் இல்லை கௌதம். பொறுமையாக் கதை பண்ணுங்க'னு சொன்னார் அஜித். முழுசா நாலு மாசம். ஆனா, எந்த பிரஷரும் இல்லை. ஃபர்ஸ்ட் ஹாஃப் வரை முடிச்சிட்டுப் போய் அவர்கிட்ட சொன்னேன். 'செஹண்ட் ஹாஃப் இதுல இருந்து அப்படியே வேற மாதிரி இருக்கும்'னு சொன்னேன். 'சூப்பர்... பண்ணுங்க'னு சொல்லிட்டார். ஃபுல் ஸ்கிரிப்ட் முடிச்சிட்டு சொன்னதும், 'நாளைக்கே ஷூட் போயிடலாம்'னு ஆர்வமாகிட்டார். 'ஸ்கிரிப்ட் நச்னு இருக்கு. எனக்கு இது ரொம்ப வித்தியாசமான படமா இருக்கும்'னு சொன்னார்.
'நாலு நாள்ல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடும். எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளிடா!' - இப்படி விதவிதமான பன்ச்சஸ் உடன் ஆக்ஷன்ல பின்னுவார். ரொமான்ஸ்ல அஜித்துக்கு இது ரொம்ப ஸ்பெஷல் படம்.
'எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது ஏன் ஜெஸ்ஸி..?'னு 'விண்ணைத்தாண்டி வருவாயா'-ல ஒரு வசனம் வரும்ல. அப்படி இந்தப் படத்துலயும் 'உலகத்துலயே ரொம்ப அழகான ஒருத்தன்'னு அஜித் பத்தி ஒரு வசனம் வரும். அந்தச் சூழ்நிலை, எமோஷனோட கேட்கும்போது அதன் அழகு புரியும்!''
இப்படி விதவிதமான பன்ச்சஸ் உடன் ஆக்ஷன்ல பின்னுவார். ரொமான்ஸ்ல அஜித்துக்கு இது ரொம்ப ஸ்பெஷல் படம்.
'எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது ஏன் ஜெஸ்ஸி..?'னு 'விண்ணைத்தாண்டி வருவாயா'-ல ஒரு வசனம் வரும்ல. அப்படி இந்தப் படத்துலயும் 'உலகத்துலயே ரொம்ப அழகான ஒருத்தன்'னு அஜித் பத்தி ஒரு வசனம் வரும். அந்தச் சூழ்நிலை, எமோஷனோட கேட்கும்போது அதன் அழகு புரியும்!''
-இப்படிப் போகிறது அந்தப் பேட்டி.


Click it and Unblock the Notifications











