Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிறக்கும்போதே ஸ்டைலோடு பிறந்தவர் ரஜினி- அக்ஷய் குமார்
மும்பை: நடிகர் ரஜினி மிகவும் ஸ்டைலான மனிதர் என நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்திருக்கிறார்.
இந்தி நடிகர் அக்ஷய் குமார் 2.ஓ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் 50% படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் அக்ஷய் குமார் சமீபத்திய பேட்டியொன்றில் ரஜினி மற்றும் ஷங்கர் இருவர் குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். '' ஷங்கர் ஒரு இயக்குநர் கிடையாது அவர் ஒரு விஞ்ஞானியைப் போன்றவர்.
ஒவ்வொரு படத்துக்கு முன்பும் மாதக்கணக்கில் ஆராய்ச்சி செய்தே அந்தப் படத்தை எடுக்கிறார். இயக்குநர் ஷங்கர் என்று கூறுவதை விட விஞ்ஞானி ஷங்கர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
ரஜினியைப் பொறுத்தவரையில் சினிமா மட்டுமல்லாது அவரது நிஜ வாழ்விலும் ஸ்டைல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ரஜினி பிறக்கும்போதே ஸ்டைலோடு பிறந்தவர்'' என்று தெரிவித்திருக்கிறார்.
அக்ஷய் நடிப்பில் அடுத்ததாக 'ருஸ்தம்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் கப்பற்படை அதிகாரியாக அவர் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து 'ஜாலி எல்எல்பி' (மனிதன்) படத்தின் 2 வது பாகத்திலும் அக்ஷய் நடிக்கவிருக்கிறார்.