Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நான் பாத்ரூம் சிங்கர்தான்... இளையராஜா எதிரில் பாட முடியவில்லை... - அமிதாப்
இளையராஜா என்ற இசை மேதைக்கு முன்னாள் பாட பயமாக இருந்தது. அதனால் வீட்டில் வைத்து ஒத்திகை பார்த்த பிறகே பாடினேன், என்று திரையுலக ஜாம்பவான் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
ஷமிதாப் படத்தில் இளையராஜா இசையில் பிட்லி சே.. என்ற பாடலை அமிதாப் பாடியுள்ளார். இந்தப் பாடல் பெரிய ஹிட்டாகியுள்ளது.
இந்தப் பாடல் பாடிய அனுபவம் குறித்து அமிதாப் கூறுகையில், "பொதுவாக பாத்ரூமில் ஷவரைத் திறந்ததும் எனக்குள் இருக்கும் பாடகன் விழித்துக் கொள்வான்.
நான் பாத்ரூம் சிங்கர்தான். முறையாக இசை பயின்றவன் இல்லை. ஆனால் இளையராஜா போன்ற இசை மேதையின் இசையில் பாடியது ஒரு ஆசீர்வாதம்தான். உண்மையில் பெரிய ஆசீர்வாதம். ஆனாலும் அவர் முன் பாட எனக்கு பெரிய தயக்கமும் பயமும் இருந்தது. அதனால் முதலில் பாடலை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். என் பாத்ரூமில்தான் பிராக்டீஸ் செய்தேன். அதன் பிறகுதான் ரெக்கார்டிங் செய்யப்பட்டது," என்றார்.
சரி... பிட்லி சே.. என்பதற்கு என்னதான் அர்த்தம்... 'அது இயற்கையை நோக்கிய அழைப்பு..' என்றார் அமிதாப்.