எங்கம்மா மதுரைக்கு 120 கி.மீ நடந்து வந்தாங்க.. ‘இட்லி கடை’ தனுஷ் உருக்கமான பேச்சு!
சென்னை: சினிமாவில் சண்டைக்காட்சிகளில் நடிப்பது வீரமாக இருக்கலாம், ஆனால் வாழ்க்கைப் பாடத்தை தனுஷ் வேறு விதமாகப் போதிக்கிறார். "சண்டைய அங்க செய்யாதீங்க, படிப்புல செய்யுங்க, உழைப்புல செய்யுங்க" என்று மதுரையில் அவர் பேசியது பலரையும் கவர்ந்தது.
தனது சினிமா பயணத்தையும், வாழ்க்கைப் போராட்டத்தையும் நினைவு கூர்ந்தார் தனுஷ். மதுரையுடனான தனது நெருங்கிய உறவைப் பற்றி பேசுகையில், தனது பெற்றோரின் வாழ்க்கைப் பயணத்தையும் பகிர்ந்துகொண்டார். அவரின் தந்தை பிழைப்புக்காக சென்னைக்குச் செல்ல பணம் இல்லாமல், தாய் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் 120 கிலோமீட்டர் தூரம் நடந்து மதுரைக்கு வந்த கதையை உருக்கமாக விவரித்தார்.

"என் அப்பா, அம்மா கால் கடுக்க நடந்து வந்து ஏறிய மேடை இது" என்று தனுஷ் உணர்ச்சிவசப்பட்ட தருணம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மதுரையில் ஆடுகளம் படத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவங்களையும் அவர் நினைவு கூர்ந்தார். அந்த 200-250 நாட்களும் மனதிற்கு அமைதியையும், நிம்மதியையும் அளித்ததாகக் கூறினார்.
மேலும், ஆடுகளம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மதுரையில் பார்த்த அனுபவத்தை மறக்க முடியாது என்று குறிப்பிட்டார். "ஒருொரு சின்ன சின்ன விஷயத்துக்கும் நீங்க எப்படி ரியாக்ட் பண்ணீங்களோ, அதை பார்த்துதான் எனக்கு புரிஞ்சது" என்றார் தனுஷ்.
இட்லி கடை திரைப்படம் ஒரு சாதாரண, எளிமையான படம் என்றும், குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படமாக இருக்கும் என்றும் தனுஷ் கூறினார். வடசென்னை 2 திரைப்படம் அடுத்த வருடம் படப்பிடிப்பு ஆரம்பித்து, அதற்கு அடுத்த வருடம் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
ராஜமுருகன் எழுதிய பாடல் வரிகள், இட்லி கடை படத்தின் ஜீவன் என்று புகழ்ந்த தனுஷ், அந்தப் பாடலை மேடையில் பாடினார். மேலும், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
தனுஷின் எளிமையான பேச்சு மற்றும் வெளிப்படையான தன்மை, அவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வைத்திருக்கிறது. "சுனாமிலயே ஸ்விம்மிங் போட்டுட்டே தான் இருக்கேன்" என்ற அவரது டயலாக், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் மன உறுதியை பிரதிபலிக்கிறது.
ரசிகர்கள் பற்றி பேசிய தனுஷ், "என்னைக்கும் மாறாத நிரந்தரம், யார்கிட்டயும் வம்புக்கு போகாத குணம். ஆனா இவங்களை பார்த்தாலே தெரியும் இவங்க கிட்ட வம்பு பண்ணவும் கூடாது" என்று கூறியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தனுஷின் பேச்சு, ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஒரு நல்ல நண்பனாகவும், குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவும் ரசிகர்களுடன் அவர் கொண்டிருக்கும் உறவை வெளிப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications











