Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
அப்படி இருந்த விஜய்யா இப்படி ஆகிவிட்டார்: வியப்பில் புலி படக்குழு
சென்னை: புலி படப்பிடிப்பில் விஜய்யை பார்ப்பவர்கள் அட நம்ம விஜய்யா இது என்று வியக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறாராம்.
சிம்புதேவன் இயக்கி வரும் ஃபேன்டஸி படமான புலியில் விஜய் நடித்து வருகிறார். படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் என்று நட்சத்திர பட்டாளமே உள்ளது. புலி படத்தின் இசை உரிமையை ஏற்கனவே சோனி நிறுவனம் வாங்கிவிட்டது.
இப்படி புலி படம் பற்றி அவ்வப்போது ஏதாவது செய்தி வந்து கொண்டிருக்கிறது.
விஜய்
விஜய் படங்களில் காமெடி செய்து கலகலப்பாக நடித்தாலும் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆச்சரியம்
படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பார். ஆனால் கேமராவுக்கு முன்பு வந்துவிட்டால் ஆளே மாறிவிடுவார் என்று நடிகைகள் அவரைப் பற்றி தெரிவித்துள்ளனர்.
விஜய்யா?
வழக்கமாக படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருக்கும் விஜய் புலி படப்பிடிப்பு தளத்தில் மற்றும் அனைவரிடமும் ஜாலியாக சிரித்துப் பேசுகிறாராம். இதை பார்க்கும் படக்குழுவினராலேயே இது விஜய் தானா என்று நம்ப முடியவில்லையாம்.
பேக்கப்
படப்பிடிப்பில் விஜய்யின் காட்சிகளை படமாக்கி முடித்து அவர் கிளம்பலாம் என்று கூறினாலும் மனிதர் அங்கேயே இருந்து அரட்டை அடிக்கிறாராம்.
கதை
புலி படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அந்த மகிழ்ச்சியில் தான் மனிதர் கலகலப்பாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.