Don't Miss!
- News சென்னை பப் விபத்து.. இரவோடு இரவாக தலைமறைவான உரிமையாளர்.. தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பொங்கலுக்கு தசாவதாரம் 'ஷ்யூர்'!
பொங்கல் பண்டிகைக்கு தசாவதாரம் நிச்சயம் வெளியாகும் என கலைஞானி கமல்ஹாசன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
Click here for more images |
சென்னையில் பழம்பெரும் மலையாள திரையுலக கேமராமேன் மகத ரவி வர்மாவுக்கு கேரள அரசின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில், கேரள அரசின் ஜே.சி. டேணியல் வாழ்நாள் சாதனை விருது, 81 வயதாகும் மகத ரவி வர்மாவுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. அடூர் கோபாலகிருஷ்ணனின் ஆஸ்தான கேமராமேனாக விளங்கியவர் ரவி வர்மா.
கேரள கலாச்சார அமைச்சர் எம்.ஏ.பேபி இந்த விருதினை வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள வர்மாவின் வீட்டில் நடந்தது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சில நிமிடங்கள் பேசினார் கமல். அப்போது, தசாவதாரம் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முழுவதும் முடிந்து விட்டது. சில நகாசு வேலைகள்தான் பாக்கி உள்ளது.
அனைத்துப் பாடல்களையும் படமாக்கி விட்டோம். கிளைமாக்ஸ் காட்சி சில நாட்களுக்கு முன்பு படமாக்கப்பட்டது.
படப்பிடிப்புக்குப் பிந்தைய தயாரிப்புப் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கண்டிப்பாக தசாவதாரம் வெளியாகும் என்று உறுதியாக கூறுகிறேன்.
படம் வெளிவருவதில் மேலும் தாமதமாகாது என்பதை உறுதியாக கூறுகிறேன் என்றார்.