Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கமல் - திரையரங்க உரிமையாளர்கள் விடியவிடிய பேச்சு
டிடிஎச்சில் வெளியாவதால் வட இந்தியாவில் விஸ்வரூபத்துக்கு ஒரு தியேட்டர் கூட ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை தன்வசம் வைத்திருக்கும் பிவிஆர் சினிமாஸ் குழுமம் கமலுக்கு வெளிப்படையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் இரு வாரங்களுக்குப் பின்பே வெளியிட வேண்டிய சூழல். தமிழகத்திலும் சுமூக நிலை இல்லை. 45 திரையரங்குகள்தான் படத்தை வெளியிட முன்வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்களுடன் நேற்றிலிருந்து விடிய விடிய கமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இந்த பேச்சில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிகிறது. முடிவில் டிடிஎச்சில் படத்தை முதலில் வெளியிடும் தன் முடிவை கமல் கைவிட சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
டிடிஎச் மூலம் ஒளிபரப்புவதில், கமல் எதிர்ப்பார்த்த அளவு முன்பதிவு ஆகவில்லை என்பதும் இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த விரிவான செய்தி இன்று பிற்பகலுக்குள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.