Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
அன்பை வலியுறுத்தும் தலைவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது!- கமல் ஹாஸன்
சென்னை: இன்று அன்பை வலியுறுத்தும் தலைவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லுாரியும், இந்தோ - அமெரிக்கன் அசோசியேஷனும் இணைந்து, மார்டின் லுாதர் கிங் நினைவு சொற்பொழிவு நிகழ்வை நடத்தின.
இதில் பங்கேற்ற கமல் ஹாஸன் பேசுகையில், "வேட்டை சமூக மரபிலிருந்து விலகி, நாகரிகம் வளர்ந்து, மனிதர்கள் நிலைத்து வாழத் துவங்கினர்.
அதன் பின்பும், மனிதர்களை வேட்டையாடுவதை, போர் விளையாட்டாக பல நாடுகள் செய்தன. போர் வெறி மிகுந்து, உலகை வெல்லும் வழியாக, ஆயுதமாக மாறியது போர்.
போர்க்குற்றங்களை பல நாடுகள், குற்றங்களாகவே பார்ப்பதில்லை. உண்மையில், உலகை, போரால் வெல்ல முடியாது; அன்பால்தான் வெல்ல முடியும். அதற்கு, உலக மக்கள் யாவரும் ஒரே குடும்பம் என்பதை உணர வேண்டும். அதைத்தான், காந்தி, மார்டின் லுாதர் கிங், நெல்சன் மண்டேலா உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
அப்படிப்பட்ட தலைவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நம் குழந்தைகளிடம், போரில்லாத உலகம் பற்றிய கனவை வளர்க்க வேண்டும். அதற்கு, அந்தத் தலைவர்களின், அறவழியை போதிக்க வேண்டும். அப்போது தான், பல தலைவர்கள் உருவாவர். உலகில் அமைதி ஏற்படும்," என்றார்.