Don't Miss!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே சரியான தீர்வு: அரவிந்த்சாமி
சென்னை: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் அல்லது மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து தான் ஒட்டு மொத்த இந்தியாவே பேசிக் கொண்டிருக்கிறது. நாடே தமிழகத்தில் நடப்பவற்றை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
நடிகர் அரவிந்த்சாமியும் தமிழக அரசியல் நெருக்கடியை கவனித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Allegations of MLAs being influenced,isolated,how can even the floor test be indicative?President's rule & re-election seems the best option
— arvind swami (@thearvindswami) February 10, 2017
எம்.எல்.ஏ.க்கள் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவது, தனிமைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அப்படி இருக்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி சரியான தீர்வாக அமையும்? ஜனாதிபதி ஆட்சி அல்லது மறு தேர்தலே சரியான தீர்வு என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் சூழல் குறித்து பிறர் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் செய்திகளையும் ரீட்வீட் செய்து வருகிறார் அரவிந்த்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.