Just In
- 2 min ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 49 min ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 53 min ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம் பேசியது என்ன? சுரேஷ் தாத்தா டிவிட்ட பாருங்க மக்களே!
Don't Miss!
- News
வங்கி மோசடி வழக்கை மூடி மறைக்க லஞ்சம்: சிக்கிய சிபிஐ அதிகாரிகள் சஸ்பெண்ட்
- Automobiles
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் சரித்திரக் கதையில் நடிக்கிறாரா ரஜினி?
சென்னை: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் படம் சரித்திரக் கதையை மையமாகக் கொண்டது என தகவல்கள் கசிந்துள்ளன.
ரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னும் வெளிவராத நிலையில், அந்தப் படத்தின் கதை பற்றிய தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளது.

சரித்திர ஆர்வம்
ரஜினிக்கு சரித்திரக் கதைகளில் ஆர்வம் அதிகம். ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.. என்று ஆரம்பிக்கிற கதைகளைப் படிக்கவே தனக்கு ஆர்வம் என ரஜினி ஏற்கெனவே சொன்னது நினைவிருக்கலாம்.

20 ஆண்டுகளாக சுமந்த கதை
ரஜினி கடந்த ஆண்டு தன் பிறந்த நாள் விழாவில் ராணா படத்தின் கதையைச் சொன்னது நினைவிருக்கலாம். அந்தக் கதையை அவர் சொன்ன விதம், அது எத்தனை வலுவானது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. முழுக்க முழுக்க சரித்திரக் கதை. அதை ரஜினியே உருவாக்கியிருந்தார். தன் மனதில் 20 ஆண்டுகளாகச் சுமந்த கதை அது என்பதையும் தெரிவித்திருந்தார்.

ராணா...
அந்தக் கதையைத்தான் ராணா என்ற தலைப்பில் 2011-ல் படமாக்க முயன்றனர். ஆனால் முதல் நாளே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவருக்கும் தெரியும்.

கோச்சடையான்
ரஜினியின் உடல்நிலையைக் கவனத்தில் வைத்து மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படம்தான் கோச்சடையான். இதுவும் சரித்திரக் கதைதான். மே மாதம் முதல் வாரத்தில் படம் வெளியாகிவிடும் என தெரிகிறது.

மீண்டும் சரித்திரக் கதை
இந்த நிலையில்தான் ரஜினியின் புதுப் படத்துக்கான வேலைகள் நடந்து வருகின்றன. முத்து, பாட்ஷா மாதிரி ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இந்தப் புதிய படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இல்லை இல்லை... இதுவும் சரித்திரக் கதைதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி கதை
ரஜினி உருவாக்கிய சரித்திரக் கதையில் தேவையான மாற்றங்கள் செய்து வேறு தலைப்பில் படமாக்க முயல்வதாகக் கூறப்படுகிறது. அதற்காகத்தான் அனுஷ்கா- சோனாக்ஷி என கம்பீரத்தன்மையும் கவர்ச்சியும் மிக்க நாயகிகளையும் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
ஆனால் இவையெல்லாமே அனுமானங்கள்தான்.. டிஸ்கஷனிலிருக்கும் ரஜினியும் ரவிக்குமாரும் சொன்னால்தான் உண்டு!