Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரிலேயே படம் வெளியாக வேண்டும்! - ரஜினி கண்டிப்பு
லிங்கா படத்தில் தனக்கு நேர்ந்த நெருக்கடிகள், நடந்தேறிய சூழ்ச்சிகள் அனைத்தையும் பார்த்த ரஜினி, தனது அடுத்த புதுப்படத்தில் இப்படி எந்த விஷயமும் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
ரஞ்சித் இயக்கும் இப்படத்துக்குத் தாணுதான் தயாரிப்பாளர் என்பதை முதலிலேயே உறுதியாகக் கூறிவிட்டாராம் ரஜினி.
ஆனால் 'லிங்கா' படத்தைப் போலப் பல தயாரிப்பாளர்கள் மாறக் கூடாது என்று முடிவு செய்து, "எந்த ஒரு நிறுவனத்துடனும் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யாதீர்கள். உங்கள் பட நிறுவனத்தின் பெயரில்தான் முழுப் படமும் இருக்க வேண்டும், வெளியாகவும் வேண்டும்" என்று ரஜினி கூறினாராம். இதைப் பட ஒப்பந்தத்திலும் சேர்க்க வேண்டும் என்றாராம் ரஜினி. எந்திரன் படத்தில் இப்படித்தான் செய்தார். அதை தாணு படத்திலும் தொடரவிருக்கிறார்.
அதேபோல, ரஜினி படம் என்றாலே அவருக்கு சில ஏரியாக்கள் விநியோக உரிமை கொடுப்பார்கள். இப்படத்தில் அது போல எதுவுமே வேண்டாம் என்று கூறிவிட்ட அவர், சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுப்பதோடு சரி.
வெளியீட்டுச் சமயத்தில் எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் தாணு மட்டுமே பொறுப்பு என்பதை படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்போதே அறிவிக்கவும் படக் குழு திட்டமிட்டிருக்கிறது.
ரஜினி படம் என்பதால் எந்த வடிவிலாவது தொல்லை கொடுக்க நினைப்போருக்கு எச்சரிக்கை அளிக்கவே இத்தனை முன் ஜாக்கிரதை!