Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெள்ள நிவாரணம்... ரசிகர்களின் சேவை பெருமிதமளிக்கிறது! - ரஜினிகாந்த்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு ரசிகர்கள் வழங்கி வரும் உதவி பெருமிதமடைய வைத்துள்ளது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாள். சென்னை மற்றும் தமிழகப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தார்.
எனவே பெரிதாக ரசிகர்களும் ரஜினியின் வேண்டுகோளை ஏற்று பிரம்மாண்ட விழாக்களைத் தவிர்த்தனர். ஆனாலும் நற்பணிகளைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில் பிறந்தநாள் அன்று ட்விட்டரில் தனக்கு வாழ்த்துச் சொன்ன அமிதாப் பச்சன், ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு ரஜினிகாந்த் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
To all my dear fans who stood & lived up to the hour of need for our chennai ..heart felt thanks ..nothing could make me happier and proud
— Rajinikanth (@superstarrajini) December 12, 2015
இதுதவிர்த்து சென்னைக்குத் தேவையான உதவிகளைச் செய்து வரும் என் ரசிகர்களுக்கு நன்றி. மேலும் இதைத் தாண்டி வேறு எதுவும் என்னை பெருமைப்படவோ, மகிழ்ச்சியடையவோ செய்யாது எனக் கூறியுள்ளார்.
அதே போல் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகளைப் பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.