Don't Miss!
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அப்பா சட்டையில் இருந்து 78 ரூபாயை திருடி சென்னைக்கு ஓடி வந்த சமுத்திரக்கனி
சென்னை: 10ம் வகுப்பு படித்து முடித்ததும் அப்பாவின் சட்டை பாக்கெட்டில் இருந்து ரூ.78ஐ எடுத்துக் கொண்டு சென்னைக்கு ஓடி வந்ததை மறக்க முடியாது என்கிறார் சமுத்திரக்கனி.
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என்று பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி. சமூக அக்கறையுடன் அவர் எடுக்கும் படங்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கிறது.
இதனால் கல்லூரி, பள்ளிகளில் நடக்கும் விழாக்களுக்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைக்க அனைவரும் விரும்புகிறார்கள்.
அப்பா
சமுத்திரக்கனி தான் இயக்கி, நடித்த அப்பா படத்தை ஜெயராமை வைத்து மலையாளத்தில் ஆகாச மிட்டாயீ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார்.
10ம் வகுப்பு
சமுத்திரக்கனி தற்போது கை நிறைய சம்பாதித்து வருகிறார். ஆனால் 10ம் வகுப்பு படித்து முடித்தவுடன் அப்பாவின் சட்டை பாக்கெட்டில் இருந்து ரூ. 78 ரொக்கத்தை எடுத்துக் கொண்டு சென்னைக்கு ஓடி வந்ததை அவரால் இன்றும் மறக்க முடியவில்லை.
காசு
78 ரூபாயுடன் சென்னைக்கு வந்த சமுத்திரக்கனியால் அங்கு 2 கூட இருக்க முடியவில்லை. மீதமுள்ள பணத்தை வைத்து விழுப்புரம் வரை சென்றுள்ளார். அதற்கு மேல் செல்ல பணம் இல்லாமல் விழுப்புரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் 5 நாட்கள் வேலை செய்துள்ளார்.
ஊர்
விழுப்புரம் ஹோட்டலில் வேலை செய்ததில் கிடைத்த 25 ரூபாயை வைத்து ஊர் திரும்பியுள்ளார். அதன் பிறகு பல முறை சென்னை வந்தபோதிலும் திருட்டுத்தனமாக வந்ததை தன்னால் மறக்க முடியாது என்கிறார் சமுத்திரக்கனி.