ஷாருக்கானுக்கு தாதாசாகேப் பால்கே ஃபிலிம் பவுன்டேஷன் விருது
மும்பை: மும்பையில் நடந்த விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு தாதாசாகேப் பால்கே ஃபிலிம் பவுன்டேஷன் விருது வழங்கப்பட்டது.
மும்பையில் கடந்த 21ம் தேதி தாதாசாகேப் பால்கே ஃபிலிம் பவுன்டேஷன் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ராஷ்ட்ரிய லோக் தள கட்சி தலைவர் அமர்சிங் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
ஃபரா கான் இயக்கிய ஹேப்பி நியூ இயர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஷாருக்கானுக்கு விருது வழங்கப்பட்டது. சிட்டிலைட்ஸ் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் ராஜ்குமார் ராவுக்கு விருது கிடைத்தது.

எனக்கு விருது கிடைக்க உள்ளது பற்றி 3 நாட்களுக்கு முன்பு தான் தெரிய வந்தது. இந்த விருது கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று ராஜ்குமார் ராவ் தெரிவித்துள்ளார்.
ஷாருக், ராஜ்குமார் ராவ் தவிர பாலிவுட் பிரபலங்கள் ஜெயபிரதா, ஹூமா குரேஷி, டைகர் ஷ்ராப், ஸ்ரேயாஸ் தல்பதே, பாடகர்கள் உதித் நாராயண், பங்கஜ் உதாஸ் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.
விருது விழாவில் மேடையில் ஷாருக்கான் ஆட அவருடன் சேர்ந்து அமர் சிங்கும் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











