அந்த வசனத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - சொல்கிறார் சிம்பு

By Shankar

Vaalu Movie
வாலு படத்தில் தனுஷை தாக்குவது போல வரும் வசனத்தை நான் எழுதவில்லை. எனக்கு அதில் சம்பந்தமே இல்லை என்று கூறியுள்ளார் சிம்பு.

சிம்பு தற்போது நடித்து வரும் வாலு படத்தில் தனுசை தாக்கி வசனம் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ், படிக்காதவன் படத்தில் தன்னை வெறுக்கும் தமன்னாவிடம் 'என்னை மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்' என்று வசனம் பேசுவார். அந்த வசனத்துக்கு போட்டியாக 'வாலு' படத்தில் வசனம் இடம் பெற்றுள்ளது.

ஹன்சிகா சிம்புவிடம், 'ஒரு சில பசங்களை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். ஆனா உன்னை மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிச்சிடும்' என்று வசனம் பேசுவதுபோல் காட்சி உள்ளது.

இந்த வசனம் தனுசுக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி, இப்போதே இணையதளங்களில் சண்டை போட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த வசனம் குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "வாலு' படத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட அந்த வசனத்தை எழுதியது இயக்குனர் விஜய். எனக்கும் அந்த வசனத்துக்கும் சம்மந்தம் இல்லை. யாரையும் தாக்கி எழுதவில்லை. மற்றவர்கள் கற்பனைக்கு பதில் சொல்லமுடியாது," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X