5 இயக்குனர்களிடம் கதை கேட்டு வைத்துள்ள விஜய்
சென்னை: விஜய் அட்லீ படத்தை அடுத்து நடிக்க 5 இயக்குனர்களிடம் கதை கேட்டு வைத்துள்ளாராம்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் புலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன் என இரண்டு ஹீரோயின்கள். மேலும் ஸ்ரீதேவி பல காலம் கழித்து புலி படம் மூலம் கோலிவுட் திரும்பியுள்ளார்.

புலி படத்தை அடுத்து விஜய் அட்லீயின் இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்ததாக அவர் யார் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். அதிலும் 5 இயக்குனர்களிடம் கதை கேட்டு வைத்துள்ளாராம். அந்த 5 பேரில் ஒருவரின் படத்தில் தான் விஜய் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அட்லீ படத்தின் படப்பிடிப்பு துவங்கியதும் தான் நடிக்கும் அடுத்த படத்தை தேர்வு செய்யப் போகிறாராம். அந்த 5 இயக்குனர்களில் யாருக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
புலி படத்தின் ஷூட்டிங் தற்போது கேரளாவில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











