விஜய் அண்ணாதான் என் பலம்.. அவரால்தான் நான் சினிமாவில் இருக்கிறேன்!- விக்ராந்த்
என் அண்ணா விஜய்யால்தான் சினிமாவுக்கு வந்தேன். அவரால்தான் இத்தனை நாளும் இங்கு தாக்குப் பிடிக்கிறேன் என்றார் நடிகர் விக்ராந்த்.
நடிகர் விஜய்யின் உறவுக்காரர் விக்ராந்த். சொந்த சித்தி மகன். கற்க கசடற படத்தில் அறிமுகமான இவர் பத்து ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் போராடி வருபவர் விக்ராந்த்.

பல படங்களில் நடித்திருந்தாலும், விக்ராந்துக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது விஷாலின் பாண்டிய நாடு படம்தான்.
இப்போது விக்ராந்த் ‘பிறவி' படத்தில் நடித்து வருகிறார். இதில் இடம்பெறும் ‘தாக்க தாக்க' என்ற அறிமுக பாடலுக்காக விக்ராந்த்துடன் விஷால், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் நடனமாடி உதவியுள்ளனர்.
இந்தப் பாடலுக்கு விஜய் ஆடவில்லையா என்று கேட்டபோது, "விஜய் அண்ணா பிஸியாக இருக்கிறார். அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது. நான் விஜய்யின் சகோதரன் என்பதால் சினிமா உலகிற்குள் எளிதாக நுழைந்துவிட்டேன். அவரது உறவினராக இருப்பதனால்தான் என்னால் பத்து வருடங்களாக இங்கே நீடிக்க முடிந்திருக்கிறது.
விஜய் எனக்கு மிகப்பெரிய வலிமையாகவும் உத்வேகமாகவும் இருக்கிறார். அவர் பெரிய நடிகராக இருந்தபோதும், எப்போதும் அடக்கத்துடனே இருக்கிறார்," என்றார்.


Click it and Unblock the Notifications











