கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்?
பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் இப்போது நடித்து வரும் விக்ரம், அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம் பொங்கலுக்கு வெளியாகி, கலவையான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டுள்ளது. இப்படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இந்நிலையில், கவுதம் மேனன் கூறிய ஒரு கதை விக்ரமுக்குப் பிடித்துப் போனதாம்.
எனவே இதில் நடிக்க விக்ரம் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
பத்து எண்றதுக்குள்ள படம் முடிவடைந்ததும் கவுதம் மேனன் படத்துடன் இணைவார் என்று கூறப்படுகிறது.
கவுதம் மேனனும், சிம்புவை வைத்து இயக்கி, பாதியில் நிற்கும் படத்தை முடித்துவிட்டு விக்ரம் புராஜெக்டுக்கு வருவார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர் விக்ரமுடன் இணையும் முதல் படம் இதுவாகும். டி.இமான் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











