Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இத்தனை வருடங்களாக தயாரிப்பாளர் சங்கம் எங்கே போனது?..கோபம் காட்டும் உதயநிதி
சென்னை: 'தெறி' பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்ற ரசிகரின் கருத்துக்கு, உதயநிதி ஸ்டாலின் கோபத்துடன் பதிலளித்திருக்கிறார்.
'தெறி' படம் செங்கல்பட்டு தியேட்டர்களில் வெளியாகாத விவகாரம் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இதனால் 'தெறி' படத்திற்கு ஆதரவு கொடுத்த 11 தியேட்டர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு கொடுக்கப்படும், என்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய 'மனிதன்' திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதற்கு முத்துராஜ் என்னும் ரசிகர் "சார் இந்த நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று உதயநிதியிடம் கூறினார்.
பதிலுக்கு உதயநிதி "கடந்த 5 வருடங்களாக என்னுடைய படங்களுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கவில்லை. அப்போது இந்த தயாரிப்பாளர் சங்கம் எங்கே போனது? என்று கோபமாக பதிலளித்துள்ளார்.
உதயநிதியின் பதிலானது கோலிவுட்டில் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.